dimanche 30 mars 2014

திருமண வாழ்க்கையை விரும்பாத பெண்கள்

காலி பிரதேசத்தில் மட்டும் 3,029 சிங்களப் பெண்கள் திருமணம் முடிக்காமல் தனியே வாழ்ந்து வருகின்றனர். இவர்களில் 1,709 பேர் 50 வயதை தாண்டிய பெண்கள். 18 - 50 வயதுக்குட்பட்ட 1,328 பெண்கள் நாங்கள் வாழ்நாளிலேயே திருமணம் முடிக்காமல் தனியாக வாழ்வதையே விரும்புகின்றார்கள் என காலி பிரதேச செயலாளர் பிரிவில் இயங்கும் எக்கமுத்துவ பியச என்ற அமைப்பு திருமணமாகத பெண்கள் என்ற தகவல் ஆராய்ச்சி சேகரிப்பு அறிக்கையை காலி பிரதேச செயலாளருக்கு சமர்ப்பித்துள்ளது. இத்தகவல் ஆராய்ச்சி அறிக்கையை சமர்ப்பித்துள்ள மேற்படி அமைப்பு, 'நாங்கள் ஒரு பிரதேசத்தில் மாத்திரமே தகவல்களை கேகரித்தோம். இலங்கையில் உள்ள ஏனைய பிரதேசங்களை எல்லாம் தகவல் சேகரிக்கும்போது இத்தொகை இலட்சத்தை தாண்டும்' என்று குறிப்பிட்டுள்ளது. 'இந்த பெண்களில் அரச மற்றும் தனியார் திணைக்களங்களில் தொழில் செய்கின்றவர்கள், தொழில் செய்து ஓய்வுபெற்றவர்களும் அடங்குகின்றனர். ஆண்களை விட பெண்களின் சனத்தொகை அதிகரித்து காணப்படுகின்றது. இலங்கையில் உள்ள சகல அரச தனியார் நிறுவனங்களில் தொழில் செய்வோரில் பெண்களே அதிகமாகப் காணப்படுகின்றனர்' என்றும் அவ்வமைப்பு சுட்டிக்காட்டியுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire