mardi 25 juin 2013

தேர்தல் நடைபெறும் செப்டெம்பர் 21 அல்லது 28 இல் ! தேர்தல்கள் ஆணையாளர்

வடக்கு, வடமேல் மற்றும் மத்திய மாகாணசபைகளுக்கான தேர்தல் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது. செப்டெம்பர் 21ஆம் திகதி அல்லது 28ஆம் திகதி குறித்த மூன்று மாகாணசபைகளுக்கான தேர்தல் நடைபெறுமென தேர்தல்கள் ஆணையாளர் மகிந்த தேசப்பிரிய இன்று திங்கட்கிழமை (24) அறிவித்துள்ளார்.

தற்போது மாகாணசபை வேட்பாளரகளுக்கான நேர்முகத்தேர்வுகள் நடைபெற்று வரும் நிலையிலேயே குறித்த அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது. விடுதலைப் புலிகளின் முன்னாள் ஊடகப் பேச்சாளர் தயா மாஸ்டர் வடமாகாண சபை தேர்தலில் அரசாங்கம் சார்பாக களமிறங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire