mardi 4 juin 2013

கடைசிவரை விலைபோக மாட்டோம்,புலி பசித்தாலும் புல்லுத்தின்னாது’ஆனால், புண்ணாக்கு தின்கின்றார்கள் என்பதே உண்மை;பீமன்

புலி பசித்தாலும் புல்லுத்தின்னாது’ என்பது பழமொழி.இந்தப்பழமொழியை வைத்துத்தான் புலிப் பயங்கரவாதிகள் தமதுசுயலாபநோக்கங்களை நிறைவேற்றி வந்திருந்தார்கள். ஆனால்புலிகள்பசித்தால் புல் அல்ல புண்ணாக்கும் தின்பார்கள் என்பதை மக்கள்ஏற்றுக்கொள்ள வேண்டும் என்ற செய்தியைச் சொல்வதற்காகத்தான்இக்கட்டுரை எழுதப்படுகின்றதுகடைசிவரை விலைபோக மாட்டோம்,விட்டுக்கொடுக்கமாட்டோம்’ என தமிழ் மக்களுக்கு வீரவசனங்கள் சொல்லிவந்தனர் புலிகள். ஆனால்பிரபாகரன்கோவணத்துடன் முள்ளிவாய்காலில் மண்டியிட்டதன் பின்னர்மஹிந்தரின் கோடிக்குள் பின்கதவால் நுழைந்த புலம்பெயர் புலிகள்புண்ணாக்கு தின்கின்றார்கள் என்பதே உண்மை.

புலிகள் இலங்கைக்குச் செல்வதும்மக்களால் தெரிவு செய்யப்பட்டஅரசாங்கம் ஒன்றுடன் உறவாடுவதும் தவறான விடயம் அல்லஆனால்,புலிகள் பின்கதவால் சென்று அரசிடம் பெறவேண்டியதை தங்களதுசுயலாபங்களுக்காக பெற்றுக்கொண்டுதொடர்ந்தும் மக்களைமந்தைகளாக்க முயல்வதும் அவர்களை அரசுக்கு எதிரான மாயையினுள்வைத்துக்கொள்ள மேற்கொள்ளும் செயற்பாடுகளும் தொடர்ந்து கொண்டேஇருக்கின்றன.

30 வருடங்களுக்கு மேலாக பயங்கரவாதத்தின் கோரப்பிடியில்சிக்குண்டிருந்த இலங்கைபல்லாயிரக்கணக்கான உயிர்த்தியாகங்களால்விடுபட்டிருக்கின்றது. அதாவது பயங்கரவாதம்தோற்கடிக்கப்பட்டிருக்கின்றது. இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் தாம்பயங்கரவாதிகளிடமிருந்து மீட்கப்பட்டிருக்கின்றோம் என்பதைவிரும்பியோ விரும்பாமலோ ஏற்றுக்கொண்டிருக்கின்றனர். ஆனால்,மக்களின் இந்த மன மாற்றத்தை சகித்துக்கொள்ள முடியாத புலம்பெயர்புலிகள் தொடர்ந்தும் அரசுக்கு எதிரான தமது பிரச்சாரப் பீரங்கியைஇயக்கிக்கொண்டே இருக்கின்றனர்.

இவ்வாறான அரச எதிர்ப்பு பிரச்சாரங்களை மேற்கொள்ளும்இணையத்தளங்களில் ஒன்றான தமிழ்சீஎன்என் எனப்படும் தளத்தைஇயக்கிக்கொண்டிந்தவர் அல்லது தொடர்ந்தும் இயக்கிக்கொண்டிருப்பவர்கண்ணன் என அழைக்கப்படுபவர்இவர்தற்போது மஹிந்தரின்கோடிக்குள் நுழைந்துள்ளார். இவரை தொடர்பு கொண்டு இலங்கைநிலவரங்கள் தொடர்பாக கேட்டேன்.

இலங்கை உலகிலே சொர்க்கம் என்று சொல்லப்பட்டதை உணர்ந்துள்ளேன்,இது ஒரு சொர்க்காபுரிதான் என்றார் தமிழ்சீஎன்என் கண்ணன்.

நீங்கள் இந்த நாட்டுக்கு எதிராக செய்த பிரச்சாரங்கள் தொடர்பாக என்னகருத்து எனக்கேட்டேன்நான் செய்த தவறுக்காக வருந்துகின்றேன்என்றார்.

வடக்கிலே சிங்களக் குடியேற்றங்கள் இடம்பெறுவதாகவும்பௌத்தஆலயங்கள் அமைக்கப்படுவதாகவும் பிரச்சாரம் செய்துள்ளீர்கள்,நிலைமைகள் எவ்வாறுள்ளது என்றேன : நாவற்குளி பிரதேசத்தில் சுமார்35 சிங்கள மக்கள் உள்ளனர்அவர்கள் இப்பிரதேசத்திலே முன்னர்வாழ்ந்தவர்கள் அது தவிர இங்கு எந்த குடியேற்றமும் இல்லை. பௌத்தகோவிலும் இல்லை. அவ்வாறு இருந்தால்தான் அதில் என்ன தப்பு என்றும்கேட்டார். இவையெல்லாம் தமிழ் தேசியக் கூட்டமைப்பினரதும்,புலம்பெயர் தேசத்தில் தொடர்ந்தும் மக்களின் பணத்தில் வாழ்ந்துகொண்டிருக்கின்ற புலிப்பினாமிகளின் பொய்பிரச்சாரங்கள் என்றார்.

மேலும் தலதா மாளிகைக்கு சென்று சங்கைக்குரிய தேரரைசந்தித்ததாகவும் அவரது காலில் வீழ்ந்து ஆசீர்வாதம்பெற்றுக்கொண்டதாகவும் கூறிய கண்ணன்பௌத்த பிக்குகள் கருணைஉள்ளம் கொண்ட அன்பான மனிதர்கள் என்றும் அவர்களிடமுள்ள அன்பும்கருணையும் தமிழ் பூசகர்களிடம் இல்லை என்றும் குறிப்பிட்டார்.

ஆனால்நீங்கள் தமிழ் மக்களிடம் விதைத்த விஷம் இன்னும்அகற்றப்படவில்லை அதிதுடன் இலங்கை அரசு தொடர்பாக தமிழ்மக்களுக்கு சொன்ன அவதூறான செய்திகள் தமிழ் மக்களின் மனங்களில்பசுமரத்தாணிபோல் பதிந்துள்ளதுஎனவேநீங்கள் எனக்கு கூறுகின்றஇந்தக்கருத்துக்களை மக்களுக்கு எப்போது தெரிவிக்கின்றீர்கள் என்றேன்.தலையை சொறிய ஆரம்பித்து விட்டார். ஏன் இந்த தயக்கம் என்றேன்.இல்லை இல்லை இதை மக்களுக்கு பெரியதாக சொல்ல வேண்டும்என்றார்.

பெரியதாக என்றால் என்ன? என்றேன். உலகத்திலுள்ள மக்கள்அனைவருக்கும் அச்செய்தி சென்றடையக்கூடியவாறு சொல்லவேண்டும்என்றார்.

அதற்குரிய ஏற்பாடுகளை செய்யவா எனக்கேட்டபோது வேண்டாம்..வேண்டாம்.. என்னை இங்கு அழைத்து வந்தவர்களிடம் நான்கேட்கவேண்டும் என்றார் கண்ணன்.

தமிழ் மக்களை தாங்கள் தவறாக வழிநாடாத்தினோம் என்பதைஏற்றுக்கொள்ளும் கண்ணன , மக்களுக்கு காலம்கடந்தேனும்உண்மையை சொல்வதற்கு தயங்குவதை அவதானிக்க முடிகின்றது.கண்ணனின் இந்தச் செயற்பாடு தொடர்ந்தும் மக்களை ஏமாற்றவேதிட்டமிட்டுள்ளனர் என்பதுடன் கண்ணன் தீய நோக்கோடுஇலங்கையினுள் நுழைந்துள்ளான் என்ற முடிவுக்கு வரவிடுகின்றது.

இவ்வாறான தீயநோக்கோடு செயற்படுகின்றவர்கள் விடயத்தில்இலங்கை அரசு அவதானமாக இருக்கத் தவறும் பட்சத்தில் 30 வருடங்கள்பயங்கரவாதத்தின் பிடியில் மக்கள் அனுபவித்த அதே அவலங்களைமீண்டுமொருமுறை அனுபவிக்க நேரிடலாம்.

இலங்கையில் யுத்தம் முடிவடைந்த பின்னர் அரசாங்கம் தமிழ் மக்களுடன்இன நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதற்கு பல்வேறு செயற்திட்டங்களைஅறிமுகப்படுத்தியுள்ளது. இத்திட்டங்களை முடக்குவதற்கு புலம்பெயர்புலிகள் பல்வேறு உத்திகளை மேற்கொண்டுவருகின்றனர்.அவ்வுத்திகளில் பிரதானமானது தமது முகவர்களை குறித்த திட்டங்களுள்நுழைப்பது. காரணம் புலிகள் ,இந்திருக்கின்ற ஒரு செயற்றிட்டத்தில்சாதாரண பொதுமக்கள் இணைந்து கொள்ள மாட்டார்கள் என்பதுபுலிகளுக்கு தெரிந்த விடயம்.

எனவே புலிகளையும் மக்களையும் இணைத்து நல்லிணக்கத்தைஉருவாக்க முடியாது என்ற உண்மையை அரசு உணர்ந்து கொண்டுபுலிகளை தனிமைப்படுத்தும் செயற்திட்டங்களைமுன்னெடுக்கவேண்டும்.

புலிகளின் மேற்படி வியுகத்தை முறியடிக்கும் விடயத்தில் இலங்கைப்புலனாய்வுத் துறையின் சேவை மிக அத்தியாவசியமாகின்றது.இலங்கையினுள் நுழைகின்ற புலம்பெயர் தமிழர்களின் கடந்தகால மற்றும்தற்காலச் செயற்பாடுகள் தீவிரமாக விசாரிக்கப்படவேண்டும். புலம்பெயர்தேசத்திலில் புலிச்செயற்பாட்டாளர்களாக இருந்த ​இலங்கையின் இனநல்லிணக்க செயற்பாடுகளினுள் இணைய விரும்புகின்றோம் எனவருகின்றவர்களை முதலில் புனர்வாழ்வு நடைமுறைக்கு உட்படுத்தியபின்னரே சாதரண மக்களுடன் இணைய அனுமதிப்பது சிறந்தது.

புலிகளால் மேற்கொள்ளப்படுகின்ற இன நல்லிணக்கத்திற்கு எதிரானசெயற்பாடுகளுக்கு இலங்கை அரசினால் இன நல்லிணக்கஇணைப்பாளர்களாகசெயற்பாட்டாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள சிலர்தெரிந்தோ தெரியாமலோ துணைபோகின்றனர் அல்லது ஏமாறுகின்றனர்.

இலங்கையில் யுத்தம் நடைபெற்றுக்கொண்டிருந்தபோதுபுலிகள்என்றுமே தோற்கடிக்கப்பட முடியாதவர்கள் என்றும் அவர்கள் மரபுவழிபடையணியையும்கடற்படையுடன் கூடிய விமானப்படையையும்,பயங்கரமானதோர் தற்கொலைப்படையணியையும்வைத்திருக்கின்றார்கள் என இலங்கை இராணுவ வீரர்களை உளரீதியாகநலிவடைச் செய்து , புலிகள் தோற்கடிக்கப்படமுடியாதவர்கள் என்றபுலிகளின் பிரச்சாரத்திற்கு வலுச்சேர்த்த சிங்கப்பூரினைத் தளமாககொண்டுள்ள புளுகுமூட்டைக்கு புலிகள் ஓர் பப்படம் என்பதும் பப்படத்தைஇறுகப்பிடித்தால் அது நொருங்கிவிடும்நொருங்கினால் சந்தர்ப்பவாதஅரசியலுக்கு தளம் அற்றுப்போய்விடும் என்ற எதிர்பார்ப்பில் கடந்த காலஆட்சியாளர்கள் புலிப்பப்படத்தை மென்மையாக கையாண்டார்கள் என்பதுதெரியாமல் போயிருந்தது கவலைக்குரியதே.

குறிப்பிட்ட புளுகுமூட்டையே கண்ணனை இலங்கைக்கு கொண்டுவந்தாகஅறியக்கிடைக்கின்றது. இவர் இலங்கை புலனாய்வுத்துறையின் கண்ணில்மண்ணைத்தூவி கணணனை நேரடியாக ஜனாதிபதியின் இன நல்லிணக்கபிரிவினருடன் இணைத்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

கண்ணனின் பின்புலம் தெரியாமல் கண்ணன் புலிகளுடன் எந்த தொடர்பும்அற்றவர் என்ற நம்பிக்கையில் நேரடியாக ஜனாதிபதி செயலகத்துடன்இணைக்கப்பட்டாரா? அன்றில் தெரிந்து கொண்டு வேறு ஏதாவதுலாபங்களுக்காக இணைக்கப்பட்டாரா? அவ்வாறாயின் அந்த லாபங்கள்தனிப்பட்டவைய ? தேசிய நலன் சார்ந்ததா? 

கண்ணன் புலிகள் இயக்கத்தில் தான் ஆயுதப்பயிற்சியைபெற்றுக்கொண்டவர் என்கின்றார். புலிகள் இயக்கத்தில் தான் இருந்தபோதுஅவ்வியக்கத்தினர் மேற்கொண்ட மனித விரோத செயல்களைசகித்துக்கொள்ள முடியாமல் அவ்வியக்கத்தை விட்டு வெளியேறிச்சென்றேன் என்கின்றார்ஆனால்அவர் சுமார் 1995 களிலிருந்துதென்கிழக்காசிய நாடுகளில் புலிகளின் ஆட்கடத்தல் காரர்களுடன்இணைத்து செயற்பட்டு வந்துள்ளதாக அறியக்கிடைக்கின்றது.

அக்காலகட்டத்தில் புலிகளின் விநாயகம் அணியின் முக்கியஸ்தரானபாண்டியனுக்கு சுமார் இரண்டரைக்கோடி பணம் கொடுத்ததாகவும்அந்தப்பணத்தை கொண்டு பாண்டியன் கனடாவில் தனது உறவுக்காரர்ஒருவரின் பெயரில் வீடு ஒன்றினை வாங்கியுள்ளதாகவும் பலரிடம்தெரிவித்துள்ளார்பாண்டியனிடம் இந்த பாரிய தொகைகொடுக்கல்வாங்கலை மேற்கொள்வதற்கு பண்டியனுடன் கண்ணன்வைத்திருந்த உறவு என்ன? குறித்த பணம் புலிகளுடையது என்றும்புலிகளின் பணத்தை தென்கிழக்காசியாவில்கையாண்டவர்களில்கண்ணனும் ஒருவர் என்றும் பேசப்படுகின்றது.

மேலும்கண்ணன் இலங்கையில் சமாதான ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தகால கட்டத்தில் கொட்டாஞ்சேனை பிரதேசத்தில் பிரயாண முகவர்நிலையம் ஒன்றை நடாத்திவந்தாகவும்அந்நிலையத்தில் புலிகளுக்கானபுலனாய்வு வேலைத்திட்டங்கள் இடம்பெற்றதாக பேசப்படுகின்றது.

2004ம் ஆண்டு இலங்கை இராணுவத்தின் ‘கப்டன்’ தர அதிகாரி ஒருவர ,புலிகளின் கட்டுப்பாட்டு பிரதேசத்தினுள் நுழைய முற்பட்டபோது,ஓமந்தை இராணுவச் சாவடியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.குறித்த இராணுவத் கப்படனை கையாண்டது கண்ணன் என்றும் அவரைபுலிகளின் புலனாய்வுத்துறைத் தலைவர் பொட்டுவை சந்திக்க அழைத்துச்சென்றபோதே கப்படன் மாட்டிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.இந்நிலையில் குறித்த கப்டனின் கோப்பை புரட்டினால் கண்ணனுக்குபுலிகளுடனான தொடர்பு தொடர்பில் தெளிவாக அறிந்து கொள்ள முடியும்.

புலிகளியக்கம் தோற்கடிக்கப்பட்ட பின்னரே தமிழ்சீஎன்என் எனும்இணையத்தளம் ஆரம்பிக்கப்பட்டது. இதன் பின்னணி நெடியவன் குழு எனநம்பப்படுகின்றது. இணையத்தளைத்தினை மக்கள் மக்கள் மத்தியில்அறிமுகம் செய்வதற்கு கண்ணன் அயராது உழைத்தார். தமிழ் இளைஞர்யுவதிகளின் முகப்புத்தகங்களினுள் சென்று மில்லியன்கணக்கானமின்னஞ்சல் முகவரிகளை சேகரித்தார். இம்மின்னஞ்சல் சேகரிப்புக்குபுலம்பெயர் தேசத்தில் நெடியவன் கட்டுப்பாட்டிலுள்ள இளையோர்அமைப்புக்கள் உதவியதாகவும் அறியக்கிடைக்கின்றது. குறித்தமின்னஞ்சல்முகவரிகளுக்கு நாளாந்தம் தமது பொய்பரப்புரைகளைஅனுப்பிவந்தார் கண்ணன். அத்துடன் தமிழ்சீஎன்என் இணையதத்தின்நடாத்துனராக தன்னை அறிமுகப்படுத்திய அவர் பல்வேறு தொடர்புகளைஉருவாக்கி கொண்டதுடன் அத்தொடர்புகள் ஊடாக அரசுக்கு எதிரானதுமாத்திரமல்ல நெடியவன் குழுவிற்கு எதிராளிகளான விநாயகம்குழுவிற்கும் எதிரான பிரச்சாரங்களையும் மேற்கொண்டதையும்அவதானிக்க முடிந்தது.

இந்நிலையில் கண்ணன் புலிகளின் ஊடுருவலாளனாக அல்லாமல் நல்லநோக்கத்துடன் இலங்கை வந்துள்ளாராகவிருந்தால்அவர் தனதுதமிழ்சீஎன்என் இணையத்தளம் ஊடாக இலங்கையில் தனதுஅனுபவங்களை மக்களுக்கு தெரிவிக்க வேண்டும் அத்துடன , தான்எத்தனை மின்னஞ்சல் முகவரிகளுக்கு போலிப்பிரச்சாரங்களை அனுப்பிவந்தாரோ அத்தனை முகவரிகளுக்கும் தனது தற்போதையமனமாற்றத்தையும் தான் கண்டுகொண்டதாக என்னிடம் தனிப்பட்டமுறையில் தெரிவித்து கருத்துக்களையும் உண்மைகளையும்தொடர்ச்சியாக அனுப்பவேண்டும்

Aucun commentaire:

Enregistrer un commentaire