dimanche 16 juin 2013

இரண்டு அச்சகங்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன :

விடுதலைப்புலிகளுக்கு சொந்;தமான இரண்டு கோடி ரூபா மதிப்புள்ள இரண்டு அச்சகங்கள் அரசுடமையாக்கப்பட்டுள்ளன.  கொழும்பு ஜம்பட்டா வீதி மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களில் இருந்த இந்த அச்சகங்கள் தொடர்பான தகவல்களை பயங்கரவாத விசாரணைப் பிரிவினர் கண்டறிந்திருந்தனர்.
 
ஜம்பட்டா வீதியில் அச்சகத்தை நடத்தி வந்த நபர் அமெரிக்காவுக்கு புலம்பெயர்ந்து சென்றுள்ளார். இவற்றை தவிர ஒரு ஆடை உற்பத்தி தொழிற்சாலை, தொடர்மாடி வீடுகள் என்பனவும் அரசுடமையாக்கப்பட்டுள்ளன. கொழும்பில் புலிகளுக்கு சொந்தமான 11 பில்லியன் சொத்துக்கள் இருந்ததாக கணக்கிடப்பட்டுள்ளது. 

Aucun commentaire:

Enregistrer un commentaire