samedi 22 juin 2013

மாகாணசபை முறையை வெள்ளை யானை என்று சிலர் முத்திரை குத்துகின்றனர்;மகிந்த ராஜபக்ச

சிறிலங்காவில் மாகாணசபை முறைமை முற்றாகத் தோல்வியடைந்து விடவில்லை என்று சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கூறியுள்ளார். 

நேற்று அலரி மாளிகையில் ஊடகங்களின் ஆசிரியர்கள் நிர்வாகிகளை சந்தித்துப் பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

“மாகாணசபை முறையை வெள்ளை யானை என்று சிலர் முத்திரை குத்துகின்றனர். 

இருந்தாலும் அதனை மக்களுக்கு பயனுள்ள வகையில் சேவையாற்றும் வகையில் பயன்படுத்த வேண்டும். 

மாகாணசபை முறைமை சிறிலங்காவில் முற்றாகத் தோல்வியடைந்து விடவில்லை. அது பல நன்மைகளையும் கொடுத்துள்ளது. 

இந்த முறைமை அறிமுகப்படுத்தப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டன. எனவே திடீர் முடிவுகள் மூலம் இதனை மாற்ற முடியாது. 

இதனைத் தொடர்வதா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும். 

அரசியல் முடிவுகள் குறித்து மக்களின் கருத்தை அறிவது குறித்து சிறிலங்கா அரசாங்கம் கவனத்தில் கொள்ளும்.” என்றும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire