vendredi 14 juin 2013

சிறுவர்கள் ஆயுதப் போராட்டத்தில் சிறுவர்கள் ஈடுபடும் நாடுகளின் பெயர் பட்டியலிலிருந்து இலங்கை நீக்கம்!

ஆயுதப் போராட்டத்தில் சிறுவர்கள்' என்னும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தின் வருடாந்த அறிக்கையிலிருந்து இலங்கை நீக்கப்பட்டுள்ளது என ஐ.நா. அறிவித்துள்ளது. 

தற்போது இலங்கையில் எந்தவொரு தரப்பும் சிறுவர்களை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்தாததினால் இலங்கை, சிறுவர்கள் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடும் நாடுகளின் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளது எனவும் ஐ.நா. புதன்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது. 
நேபாளம், இலங்கை ஆகிய நாடுகளில் 2012இல் எந்தவொரு தரப்பும் சிறுவர்களை ஆயுதப் போராட்டத்தில் ஈடுபடுத்தவில்லை. இதன் அடிப்படையில் நேபாளமும் இலங்கையும் இந்தப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுவிட்டதாக இந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Aucun commentaire:

Enregistrer un commentaire