vendredi 21 juin 2013

காங்கிரஸ் ஆட்சி அமையும் தனித்துப் போட்டியிட்டால்


தேர்தல்களில் தொடர்ந்து தனித்துப் போட்டியிடுவதன் மூலம் எதிர்காலத்தில் காங்கிரஸ் கட்சியால் தமிழகத்தில் ஆட்சியைப் பிடிக்க முடியும் என்று, அந்தக் கட்சியின் மாநில முன்னாள் தலைவர் கே.வீ.தங்கபாலு கூறினார்.
சேலத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கமிட்டியின் ஆலோசனைக் கூட்டத்தில் அவர் மேலும் பேசியது:
கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஒவ்வொரு தேர்தலிலும் தொடர்ந்து சொந்தப் பலத்தில் போட்டியிட்டதாலேயே இப்போது ஆட்சியைக் கைப்பற்ற முடிந்தது.
அதேபோல, தமிழகத்தில் நடைபெறும் தேர்தல்களில் தனித்துப் போட்டியிட்டால், எதிர்காலத்தில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடிக்கும் என்றார் அவர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire