jeudi 27 juin 2013

தமிழர்களின் உண்மையான பிரச்சிணைகளை மூடி மறைக்கவுமே அரசாங்கம் மீண்டும் பாராளுமன்ற தெரிவுக் குழு ; ரில்வின் சில்வா

news
அரசியல் தீர்வு விவகாரத்தையும் தமிழர்களின் உண்மையான பிரச்சிணைகளை மூடி மறைக்கவுமே அரசாங்கம் மீண்டும் பாராளுமன்ற தெரிவுக் குழுவை அமைத்துள்ளது ஜே.வி.பியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.

சிங்கள இனவாதத்தை தமிழர்களுக்கு எதிராக மிகவும் மோசமான முறையில் அரசாங்கம் தூண்டி விட்டுள்ளது. இது மன்னிக்க முடியாத குற்றமாகும். கடந்த நான்கு வருடத்தில் அரசாங்கம் நாட்டு மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கு எவ்விதமான நடவடிக்கைகளையும் முன்னெடுக்காமையினால் நல்லிணக்கத்திற்கான சந்தர்ப்பம் கைவிட்டுப் போயுள்ளது.

எனவே அரசாங்கத்தின் இவ்வாறான முட்டாள் தனமான நடவடிக்கைகளை கண்டித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதுடன் தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கான கட்டாய யோசனைகளையும் ஜே. வி. பி முன் வைக்கவுள்ளது.

13ஆவது திருத்தச் சட்டம் தொடர்பில் ஆராய்வதற்கென நியமித்துள்ள பாராளுமன்ற தெரிவுக் குழுவில் தமது கட்சி கலந்துக்கொள்ளாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
- See more at: http://onlineuthayan.com/News_More.php?id=416672130427625579#sthash.mj1bhNB3.dpuf

Aucun commentaire:

Enregistrer un commentaire