vendredi 21 juin 2013

தோழர்பத்மநாபா தியாகிகள் தின நிகழ்வு சென்னையில்

naba day chennaiசென்னை புழல் அகதிகள் முகாமில் 19.6.13) காலை 7.30 மணியளவில் தியாகிகள் தினத்தை ஒட்டி ஈழவிடுதலைப் போராட்டத்தில் நீதிக்காகவும். ஜனநாயத்துக்காகவும், சுதந்திரத்துக்காகவும்,மனிஉரிமைகளுக்காகவும் மரணித்த தோழர்கள் பொதுமக்களுகாக அஞ்சலி நிகழ்வு நடைபெற்றது. இரண்டு நிமிட மௌன அஞ்சிலியுடன் நிகழ்வு ஆரம்பமானது. இந்த நிகழ்விற்கு பத்மநாபா-ஈ.பி,ஆர்.எல்.எப் தோழர்ஸ்ரனிஸ் தலைமை தாங்கினாh.; சிறப்பு அழைப்பாளராக தமிழ் மாநில காங்கிரசின் புழல் பகுதி பொறுப்பாளர் லாரன்ஸ் அழைக்கப்பட்டார். தோழர்பத்மநாபா அவர்களின் திருவுருவ படத்திற்கு மலர் மாலை அணிவித்து அவர் அஞ்சலி செலுத்தினார். ஈ.என்.டி.எல்.எப் தோழர்குட்டி தலைமையில் ஈ.என்.டி.எல்.எப் தோழர்கள் பங்குபற்றினர். புழல் முகாமில் உள்ள எமது தோழர்களும் பங்குபற்றினர். தியாகிகள் தின நிகழ்வுக்கு வந்திருந்த அனைவரும் தோழர்பத்மநாபா திருவுருவ படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire