mercredi 19 février 2014

ஈராக்கில் சன்னி ஷியா வன்முறை 40 பேர் பலி

ஈராக்கில் கடந்த சில ஆண்டுகளாக அல்-கொய்தாவுடன் இணைந்த சன்னி இஸ்லாமிய கிளர்ச்சியாளர்கள், ஷியா முஸ்லிம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகின்றனர். சமீபகாலமாக வன்முறை கடுமையாக அதிகரித்து வருவகிறது. இந்நிலையில், தலைநகர் பாக்தாத் மற்றும் தெற்கு பகுதியில் உள்ள ஹில்லா நகரில் இன்று மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடங்களில் அடுத்தடுத்து கார் குண்டுகள் வெடித்தன.பாக்தாத்தில் நான்கு இடங்களில் நடந்த குண்டு வெடிப்பில் 17 பேர் பலியாகினர். 49 பேர் காயமடைந்துள்ளனர். பேருந்து நிலையத்தில் நடந்த குண்டுவெடிப்பில் 7 பேர் இறந்தனர். 18 பேர் படுகாயமடைந்துள்ளனர். இதேபோல் ஹில்லாவில் நான்கு கார் குண்டுகள் வெடித்ததில் 11 பேர் பலியாகினர். 35 பேர் காயமடைந்துள்ளனர்.
ஹில்லா அருகில் உள்ள முசாசிப் நகரில் நிறுத்தி வைக்கப்பட்ட காரில் குண்டு வெடித்தில், 5 பொதுமக்கள் கொல்லப்பட்டனர். 13 பேர் படுகாயமடைந்தனர். இந்த தாக்குதல்களுக்கு எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.

Aucun commentaire:

Enregistrer un commentaire