dimanche 9 février 2014

செல்போனில்' கார்த்திக் பேட்டி!

தேனி: அகில இந்திய நாடாளும் மக்கள் கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாடாளும் மக்கள் கட்சி என்ற பெயரில் தமிழகத்தில் 10 தொகுதிகளில் போட்டியிடப் போவதாக அதன் நிறுவனர் நடிகர் கார்த்திக் கூறியுள்ளார். இக்கட்சி ஏற்கனவே நடைபெற்றுள்ள தேர்தல்களில் போட்டியிட்ட பொழுது ஏகப்பட்ட பிரச்சினைகள்,வேட்பாளர்கள் காணமால் போதல், வாபஸாகுதல், டெபாசிட் இழப்பு போன்ற எக்கச்சக்கமான பக்க விளைவுகளை சந்தித்துள்ளது. இந்நிலையில் இக்கட்சி "நாடாளும் கட்சி" என்ற பெயரில் 10தொகுதிகளில் போட்டியிடப் போவதாக, இதன் நிறுவனரான கார்த்திக் தேனியில் போட்டியிடப் போவதாகவும் கூறியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire