dimanche 23 février 2014

நட்சத்திர விடுதியினை அமைக்க மஹிந்தவின் புதல்வர் நாமல் ராஜபக்ஸ களமிறங்கியுள்ளார் நெடுந்தீவுபகுதியில்

 
நெடுந்தீவுபகுதியில் நட்சத்திர அந்தஸ்திலான ஹோட்டலொன்றினை அமைக்க மஹிந்தவின் புதல்வரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ தயாராகியுள்ளார். இதற்கென சுமார் 450 மில்லியனை அவர் ஒதுக்கியிருப்பதாகவும் நீச்சல் தடாகம் மற்றும் திருமண்டபமென அனைத்து வசதிகளுடன் குறித்த ஹோட்டல் கட்டப்படவுள்ளதாகவும் தெரியவருகிறது. அத்துடன் கடல்வழி தொடர்பு மட்டுமே கொண்ட நெடுந்தீவிற்கு சுற்றுலாப்பயணிகள் வந்து சேரக்கூடியதாக சிறிய அளவிலான ஓடுபாதையுடன் விமான நிலையமொன்றும் அமைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
இதனிடையே குறித்த ஹோட்டipனை சூழ நூறு வீடுகள் நிர்மாணிக்கப்படவுமுள்ளது. எனினும் அவை உள்ளுர் மக்களிற்குடையதாக இருக்கமாட்டதெனவும்  மேலும் தெரியவருகின்றது.
இதற்கான கட்டுமான பணிகள் விரைவில் ஆரம்பமாகவுள்ளதாகவும் பிரபல ஒப்பந்த நிறுவனமான மகா நிறுவனமே இக்கட்டுமானப்பணிகளை முன்னெடுக்க பொறுப்பேற்றிருப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் அப்பணிகளிற்கான தி;ட்டமிடல்களை முன்னெடுக்க இலங்கையின் முன்னணி கட்டடக்கலைஞர்கள் குழுவொன்று இலங்கை விமானப்படை உலங்கு வானூர்தியில் சென்று தீவினை சுற்றிப்பார்வையிட்டுள்ளனர். அத்துடன் கடற்படை அதிவேகப்படகுகளும் இப்பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளது. தீவகப் பகுதிகளில்  வாழ்ந்த பூர்வீக குடிகள் அங்கிருந்து யாழ்.நகர் நோக்கி இடம்பெயர்ந்து வருகின்ற நிலையில் சுவீகரிப்புக்கள் ஆரம்பமாகியுள்ளன.

Aucun commentaire:

Enregistrer un commentaire