mercredi 5 février 2014

முஸ்லிம்களின் கொலை: வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்டமை மனித உரிமை மீறல்கள் தொடர்பில் ஜெனீவாவில் பிரேரணை கொண்டுவர வேண்டும்

வட பகுதியிலிருந்து முஸ்லிம்கள் ஒரே இரவில் புலிகளால் விரட்டப்பட்டமை, பள்ளிவாசல்களில் வைத்து கொடூரமான முறையில் கொலை செய்தமை போன்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்துவதற்கான ஆணைக் குழு ஒன்று நியமிப்பது தொடர்பிலான பிரேரணை ஒன்று ஜெனீவாவில் கொண்டுவர வேண்டும் என்று தகவல் மற்றும் ஊடகத்துறை அமைச்சின் மேற்பார்வை எம்.பி. ஏ. எச். எம். அஸ்வர் தெரிவித்தார். வெளிநாட்டு சக்திகளான போர்த்துக்கீசர்கள், ஒல்லாந்தர்கள் இந்த நாட்டை ஆண்ட போது அவர்களை இந்த மண்ணில் இருந்து விரட்டுவதற்கு முஸ்லிம்கள் பெரும் பங்களிப்பை வகித்தனர் என்று வரலாறு பெருமையாக பேசுகிறது. சீத்தாவக்கை இராச்சியத்தில் மாயாதுன்னவின் படையின் முன்னணி வீரர்களாக போராடியவர்கள் பிச்சை மரிக்கார், குஞ்செலி மரிக்கார், அலி மரிக்கார், இப்றாஹிம் மரிக்கார் போன்றவர்கள் என்பதை இந்த நாட்டின் பெரும்பான்மை இனத்தவர்கள் கூட மறுப்பதில்லை. ஜெனீவாவில் மனித உரிமைகள் தொடர்பில் பேசுபவர்கள் வடக்கிலிருந்து 70 ஆயிரம் முஸ்லிம்கள் ஒரே இரவில் விரட்டப்பட்டமை, காத்தான்குடி, ஏறாவூர், பள்ளியகொடெல்ல அளிஞ்சிப்பொத்தான பகுதிகளில் பள்ளிவாசல்களில் வைத்து மிகவும் கொடூரமான முறையில் வெட்டி கொலை செய்த புலிகளின் மனித உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணை நடத்துவதற்கான ஆணைக் குழுவை நியமிப்பதற்கான பிரேரணையை ஜெனீவாவில் கொண்டுவர வேண்டும்.

Aucun commentaire:

Enregistrer un commentaire