lundi 3 février 2014

இலங்கையில் விபச்சார இல்லங்கள் அறிமுகம்! முதலமைச்சர் விக்கினேஸ்வரன்

இலங்கையில்  விபச்சார இல்லங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு அவற்றுக்காக நாதியற்ற இளம் தமிழ்ப் பெண்கள் கொண்டு செல்லப்படுவதாக குற்றஞ்சாட்டியுள்ளார் வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன்.   "இளைஞர்களது உணர்வுகளை மழுங்கடிக்கச் செய்ய இன்று பல பிழையான நடவடிக்கைகள் அவர்களுக்கு ஊட்டப்பட்டு வருகின்றன. இளைஞர்களின் உணர்வுகள், தங்களுக்குப் பாதகமாக ஆற்றுப்படுத்தப்பட்டுவிடுமோ என்று எண்ணும் சிலரால் போதைப் பொருள்கள் இளைஞர், யுவதிகள் மத்தியில் அறிமுகப்படுத்தப்படுகின்றன. வடமாகாணத்தில் இதுவரை காலமும் இல்லாத இந்தப் பழக்கம் தற்போது பரவிவருகின்றது.    இந்தப் பொறிக்குள் அகப்படாமல் நீங்கள் தப்பித்துக் கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

தற்போது விபச்சார இல்லங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் அறிகின்றேன்.    நாதியற்ற இளம் விதவைகள், வறுமையின் கோரப்பிடியில் வருந்தி நிற்கும் பல இளம் பெண்கள், இந்த இல்லங்களுக்கு கொண்டு செல்லப்படுகின்றனர் என்று அறிகின்றேன்.   கொழும்பில் இருக்கும்போது, பொலிஸாரின் உதவியுடனும், இராணுவத்தினரை ஈர்ப்பதற்காகவும் நடத்தப்படும் இந்த இடங்கள் பற்றி எனக்குத் தகவல்கள் கிடைத்தன'' என்றார் அவர். 
வலி. தென்மேற்கு பிரதேச இளைஞர் கழகச் சம்மேளனம் நடத்திய இரண்டாவது வருடாந்த இளைஞர் மாநாடு மானிப்பாய் பிரதேசசபை கலாசார மண்டபத்தில் நேற்று நடைபெற்றது.    நிகழ்வில் பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட வடக்கு மாகாண முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் கலந்துகொண்டார். அவர் அங்கு மேலும் பேசுகையினில் எமது கலாசாரம், வாழ்க்கை முறை, உணர்வுபூர்வமான பாரம்பரியங்கள் யாவும் கைவிடப்படும் வகையில் இளைஞர்கள் மாற்றப்படுகின்றார்கள். பணம் ஒன்றே குறிக் கோளாகச் செயற்படும் பலரால் இளைஞர்கள் திசை மாற்றப்படுகின்றார்கள் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire