mercredi 12 février 2014

சட்டங்களை வைத்து பிளைப்பு நடாத்தும் தேசிய முதலாலிகள்


அண்மையில் வரணி மகா வித்தியாலயத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்ட முதலமைச்சர் விக்னேஸ்வரன்,
“கர்மவினை எவரையும் விட்டு வைக்காது. நாம் முன்னர் செய்த கருமங்களுக்கே இப்பொழுது பலனை அனுபவிக்கின்றோம். சர்வாதிகாரிகளாக இருந்த எகிப்தின் முபாரக், ஈராக்கின் சதாம் ஹுசைன், பாகிஸ்தானின் முஷாரப் ஆகியோர் இருந்த நிலை என்ன என்பதையும் இறுதியில் அவர்களுக்கு என்ன நடந்தது என்பதையும் உணர்ந்து கொள்ள வேண்டும்” என்று உரையாற்றியிருந்தார்.இதில் இருந்து பிரபாகரன் செய்த கர்ம பயனே முள்ளிவாய்க்காலில் அனாதை பிணமாக கிடக்க காரணமாயிற்று என சொல்லாமல் சொன்ன முதலமைச்சர் விக்னேஸ்வரன்,இலங்கையின்; சட்டதிட்டங்களுக்கு எதிராக நான் கருத்து தெரிவித்தால் எனக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்கலாம்' என்று வடமாகாண முதலமைச்சர் சீ.வி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார். இன்று நோர்வேத் தூதுவருடனான சந்திப்பின்  பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே இதனை அவர் தெரிவித்தார்.
தென்மராட்சியில் வடமாகாண முதலமைச்சர் ஆற்றிய உரைதொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜனாதிபதி  விசாரணைக்குழு ஒன்றை அமைத்துள்ளார். இது தொடர்பில் முதலமைச்சரிடம் கேள்வி எழுப்பப்பட்டிருந்த போது 'அவ்வாறு அமைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக நான் அறிகின்றேன். இதுவரை எனக்கு எந்தவிதமான அறிவிப்புக்களும்
விடுக்கப்படவில்லை நான் உரையாற்றும் போதே எழுதி முன்கூட்டி தயாரித்தே நான் உரையாற்றுவேன். சில விடயங்களை நான் எழுத்தில் இல்லாமல் பேசுவேன். குறித்த விடயம் தொடர்பில் நான் சட்டத்திற்கு முரணான வகையில் ஏதாவது கருத்துக்கள் முன்வைத்திருந்தால் என்மீது சட்ட நடவடிக்கை எடுக்கலாம்' என்று தெரிவித்த அவர் உண்மையினையே தான் பேசியதாகவும் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire