mercredi 17 juillet 2013

காங்கோ நாட்டில் அரசுப் படைகள் தாக்குதலில் 120 போராளிகள் சாவு

காங்கோ நாட்டில் அரசுப் படைகள் திங்கள்கிழமை நடத்திய தாக்குதலில் போராளிகள் 120 பேர் கொல்லப்பட்டனர்.அரசை எதிர்த்து எம்23 என்ற கிளர்ச்சிப் படை கடந்த ஒராண்டுக்கும் மேலாக ஆயுதம் ஏந்தி போராடி வருகிறது. இரு தரப்புக்கும் நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் தோல்வி அடைந்து விட்டன.காமாவின் வடக்குப் பகுதியில் உள்ள சில கிராமங்கள் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் இருந்தது. அங்குள்ள கிளர்ச்சியாளர்களின் நிலைகள் மீது தாக்குதல் நடத்த ராணுவம் ஞாயிற்றுக்கிழமை அனைத்து ஏற்பாடுகளையும் செய்தது.
திஙக்ள்கிழமை காலையில் தாக்குதலை தொடங்கியது. இரு தரப்புக்கும் கடுமையான சண்டை நடைபெற்றது. ராணுவ தாக்குதலில் 120 கிளர்ச்சியாளர்கள் கொல்லப்பட்டனர். ராணுவ தரப்பில் 12 பேர் உயிரிழந்தனர் என்று, அரசு செய்தித் தொடர்பாளர் லாம்பர்ட் மென்டலின் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire