jeudi 18 juillet 2013

இரண்டு விக்கற் சம்பந்தன் அவுட் சே னாதி இன்!

மிக நீண்ட வாதப்பிரதிவாதங்களுக்குப்பின் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரினால் தாண்தோண்றித்தனமாக மேற்கொள்ளப்பட்ட முதலமைச்சர் வேட்பாளர் நியமனத்தினால் விசனமுற்றிருக்கும் தமிழரசுக்கட்சியினர் எதிர்வரும் 20ம் திகதி  இடம்பெறவிருக்கும் தமிழரசுக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் அதன் தலைவர் சம்பந்த்னுக்கு ஆப்பு வைக்கக்காத்திருக்கிண்றார்கள்.
அதாவது சம்பந்தன் சங்கரிக்கு செய்த அதே வேலையை தற்போது தமிழரசுக் க்ட்சி சம்பந்தனுக்கு செய்யப்ப்பொகிண்றார்களாம்.
திரு.விக்னேஸ்வரனின் நியமனத்தை ஏற்க மறுக்கும் பெரும்பான்மை தமிழரசுக்கட்சியினர் எதிர்வரும் 20ம் திகதி தமது தாண்தோண்றித்தனமான தலைவருக்கு எதிராக நம்பிக்கையில்லாத்தீர்மானத்தை நிறைவேற்றி அவரை திருகோணமலையில் ஓய்வெடுக்க அனுப்பிவிட்டு மாவை சேனாதியை முதலமைச்சர் வேட்பாளராக தமிழரசுக்கட்சியினர் நியமிக்கவுள்ளனர்.
இது இப்படியிருக்க தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு எண்றாலே தமிழரசுக்கட்சிதான் எண்ற தாரகை மந்திரம் புரியாத மண்டையன் குழு- தலைவர் சுரேஸ் பிரேமச்சந்திரன் த தே கூட்டமைப்பின் சார்பில் சேனாதி நிறுத்தப்பட மாட்டார் என இண்றும் பலரிடம் கூறித்திரிகிண்றார். அப்படியே எதிர்வரும் 20ம் திகதி சம்பந்தனுக்கு அவ்வாறானதொரு  நிலையேற்பட்டு அவர் ஓரம் கட்டப்படும் பட்சத்தில் சேனாதிராசா தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் முதலமைச்சர் வேட்பாளராவதற்கு கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் சுரேஸ் அணி தவிர்ந்த ஏனையோர்கள் மாவைக்கு ஆதரவு வழங்க தயாராக இருப்பது குறிப்பிடத்தக்கது.
இவ்வாறானதொரு முடிவு வரும் பட்சத்தில் சுரேஸின் அரசியல் வாழ்க்கையும் அஸ்த்தமனமாவது  உறுதி
இந்த நிலையில் திரு. விக்னேஸ்வரன் எந்த சின்னத்தில் போட்டியிடுவார்? அல்லது போட்டியில் இருந்து ஒதுங்குவாரா? அல்லது …….? எண்ற கேள்விகளுக்கு 20ம் திகதி பதில் கிடைத்துவிடும்
எஸ்.எஸ்.கணேந்திரன்

Aucun commentaire:

Enregistrer un commentaire