mardi 30 juillet 2013

நல்லெணத்துடன் வரும் ஓரினச் சேர்க்கையாளாகள் பற்றி தீர்மானிக்க நான் யார்;பாப்பாண்டவர்

ஓரினச் சேர்க்கையாளர்கள் பற்றி தீர்மானிக்க நான் யார் – பாப்பாண்டவர்ஓரினச் சேர்க்கையாளாகள் பற்றி தீர்மானிக்க நான் யார் என பாப்பாண்டவர் பிரான்ஸிஸ் ஆண்டகை தெரிவித்துள்ளார்.
பிரேஸிலுக்கான ஐந்து நாள் விஜயத்தை முடித்துக் கொண்டு வத்திக்கான் திரும்பிய போது ஊடகவியலாளர்களுக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஓரினச் சேர்க்சையாளர்களை ஓரம் கட்டாது சமூகத்தில் இணைத்துக் கொள்ள வேண்டுமெனத் தெரிவித்துள்ளார்.
கடவுளை நம்பி நல்லெணத்துடன் வரும் ஓரினச் சேர்க்கையாளரைத் தடுக்கும் அதிகாரம் தமக்குக் கிடையாது னஎ அவர் குறிப்பிட்டுள்ளார்.
பெண்கள் மத குருக்களாக உருவாக முடியாது என்ற போதிலும் தேவாலயங்களில் முக்கியமான பங்கினை வகிக்க முடியும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இதற்கு முன்னர் பாப்பாண்டவராக பதவி வகித்த 11ம் பெனடிக் ஆண்டகை, ஓரினச் சேர்க்கையாளர்கள் தொடர்பில் கொண்டிருந்த கொள்கைகளுக்கு முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை புதிய பாப்பாண்டவர் வெளியிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ஓரினச் சேர்க்கையாள மதகுருமாரின் பாவங்கள் மறக்கப்பட்டு மன்னிக்கப்பட வேண்டுமென பாப்பாண்டவர் பிரான்ஸிஸ் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire