dimanche 28 juillet 2013

விடுதலைப் புலிகள் முன்னணி அமைப்புகள் ஐரோப்பாவில் இன்னும் நிதி சேகரிக்கிறார்கள் !

ஐரோப்பாவில் விடுதலைப் புலிகள் மற்றும் அதன் முன்னணி அமைப்புகள் நிதிசேகரித்து வருவதாக ஜி.எல் பீரிஸ் ஐரோப்பிய எம்.பீக்களிடம் முறைப்பாடுசெய்துள்ளார். கடந்த 18ம் திகதி முதல் ஐரோப்பிய ஒன்றியத்தின் எம்.பீக்கள் குழு ஒன்று இலங்கைக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ளது. அவர்கள் அமைச்சர் ஜி.எல் பீரிஸை சந்தித்தவேளையே அவர் மேற்கண்ட விடையங்களை அவர்களுக்குத் தெரிவித்துள்ளார். இந்த நிதி சேகரிப்பு தொடர்பாக இலங்கை அரசு பீதியில் உள்ளது இதன் மூலம் தெரியவந்துள்ளது. ஐரோப்பாவில் உள்ள பல தமிழ் அமைப்புகள் விடுதலைப் புலிகளுக்காக நிதி சேகரிப்பதாகவும், அதனை ஐரோப்பிய ஒன்றியம் தடுத்து நிறுத்தவேண்டும் என்றும் இதன்போது ஜி.எல் பீரிஸ் கோரிக்கை விடுத்துள்ளார். 

இதற்கு பதிலளித்த ஐரோப்பிய ஒன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தாம் அது தொடர்பாக கவனத்தில் கொள்வதாகவும் தெரிவித்துள்ளார்கள். புலிகள் மீளவும் கட்டியெழுப்பப்படலாம் என்ற அச்சம் காணப்படுவதாகவும், ஏன் இவ்வாறு நிதி சேகரிக்கப்பட்டு வருகிறது என்று தமக்கு தெரியவில்லை என்றும் ஜி.எல் பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார். சுவிஸ், ஜேர்மனி, பிரான்ஸ் உட்பட சில நாடுகளில் இன் நிதி சேகரிப்பு நடைபெறுவதாக பீரிஸ் மேலும் தெரிவித்துள்ளார். புலம்பெயர் நாடுகளில் செயல்படும் ஜனநாயக அமைப்புகளையும், புலிகளின் முன்னணி அமைப்புகள் என்று அவர் மேலும் குற்றஞ்சுமத்தியுள்ளார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்க விடையம் ஆகும்.

இலங்கை சென்றுள்ள ஐரோப்பிய ஒன்றிய பாராளுமன்ற உறுப்பினர்கள் ஊடாக, தொடர்ந்தும் புலிகளை தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கமாக வைத்திருக்க ஜி.எல் பீரிஸ் பாரிய நடவடிக்கைகளை எடுத்து வருகிறார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிப்பது போல, வெளிநாட்டில் உள்ள தமிழர் அமைப்புகளுக்கு புலிகள் சாயம் பூசவும், நிதி சேகரிப்பதாகக் கூறி, புலிகள் இயக்கத்தை தொடர்ந்தும் தடைசெய்யப்பட்டுள்ள பட்டியலில் வைத்திருக்கவுமே இவர் இவ்வாறு இவர் கூறிவருவதாக ஆய்வாளர்கள் கருத்து தெரிவித்துள்ளார்கள். (ஐரோப்பிய பாராளுமன்ற உறுப்பினர்கள் இலங்கையில் நடத்திய சந்திப்பின் புகைப்படங்கள் இங்கே இணைக்கப்பட்டுள்ளது)

Aucun commentaire:

Enregistrer un commentaire