mardi 2 juillet 2013

யாழ்.நகர இடங்களில் சிறுநீர் கழித்தால் கைதுசெய்யப்படுவார்கள்

யாழ்.நகரப் பகுதிக்கு வரும் பயணிகள் போக்குவரத்துக்கு இடையூறாகவும் துர்நாற்றம் வீசும் விதமாக யாழ்.மத்திய பேரூந்து நிலையச் சூழலில் சிறுநீர் கழித்து விட்டு செல்பதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளதாகவும் எனவே இவர்கள் மீது பொலிஸார் நடவடிக்கை எடுக்கவுள்ளதாக யாழ்.பொலிஸ் நிலைய குற்றத் தடுப்புபொறுப்பதிகாரி விக்கிரமராட்சி தெரிவித்தார்.
சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு இந்த நடவடிக்கை இம்மாதம் முதல் எடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire