mardi 2 juillet 2013

சம்மந்தனின் அரச ஆதரவு டயலாக். வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதா? இல்லையா?

முதலமைச்சர் வேட்பாளர் குறித்து இன்னமும் தீர்மானிக்கவில்லை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

எதிர்வரும் வட மாகாணசபைத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் முதன்மை வேட்பாளர் எவரையும் இதுவரையில் தெரிவு செய்யவில்லை என கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் குறிப்பிட்டுள்ளார்.
கட்சியின் பொதுச் செயலாளர் மாவை சேனாதிராஜா முதலமைச்சர் வேட்பாளராக பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக வெளியான தகவல்களில் உண்மையில்லை என அவர் தெரிவித்துள்ளார்.
வட மாகாணசபைத் தேர்தல் அறிவிக்கப்பட்டதன் பின்னரே முதலமைச்சர் வேட்பாளர் பற்றிய தீர்மானங்கள் எடுக்கப்படும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மேலும் வட மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதா இல்லையா என்பதனை முதலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தீர்மானிக்க வேண்டும் எனவும் அதன் பின்னரே அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து தீர்மானங்கள் எடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire