jeudi 4 juillet 2013

நந்திக் கடலருகில் கோவணத்துடன்”வாக்குப் பொறுக்குவதற்காக எதையும் பேசத்தயங்காத கும்பல்

வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் கூட்டமைப்பின் அங்கத்துவக்கட்சிகளின் மாவை. சேனாதிராஜா, சுரேஷ் பிரேமச்சந்திரன், செல்வம்.அடைக்கலநாதன், சித்தார்த்தன், ஆனந்தசங்கரி ஆகியோரும், உள்ளுராட்சி மன்றங்களின் தலைவர்கள், உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டிருந்தனர்.
மிகவும் ஆபத்தான காலத்தில் தமிழ் சமூகம் உள்ள நிலையில் தியாகிகள் தினம் வவுனியாவில் அனுஸ்டிக்கப்பட்டது.
TNA-logoஇந்த நிகழ்வில் கவிதை ஒன்று வாசிக்கப்பட்டது. பிரபாகரனின் தீர்க்கதரிசனத்தால் தமிழ் மக்கள் பலம் பெற்றுள்ளனர் என வரிக்கு வரி கூறிய தேசியக் கூட்டமைப்பின் தலைமையில் நடைபெற்று இக்கூட்டத்தில் வாசிக்கப்பட்ட கவிதையில் வரிக்கு வரி “பத்மநாபாவைக் கொன்றவர்கள் நந்திக் கடலருகில் கோவணத்துடன்” என்று விழிக்கப்பட்டத்து. வாக்குப் பொறுக்குவதற்காக எதையும் பேசத்தயங்காத இந்தக் கும்பல் நாளை மண்டையன் குழுவைப் புதுப்பித்தாலும் வியப்படைவதற்கில்லை.

Aucun commentaire:

Enregistrer un commentaire