samedi 13 juillet 2013

குழந்தை பலி 88 பேர் மீட்பு ஆஸி. கடலில் படகு கவிழ்ந்ததில்

புகலிடக் கோரிக்கையாளர்களைச் ஏற்றிச் சென்ற படகொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியதில் குழந்தையொன்று பலியாகியதுடன் 88 பேர் காப்பாற்றப்பட்டுள்ளதாக அவுஸ்திரேலியா அறிவித்துள்ளது.
அவுஸ்திரேலியாவின் கிறிஸ்மஸ் தீவிற்கும் இந்தோனேசியாவிற்கும் இடையில் இந்த விபத்து இன்று சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது என்று அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் ஜேசன் கிளயார் தெரிவித்துள்ளார்.
குறித்த படகில் இருந்தவர்களில்  88 பேர் இதுவரை காப்பாற்றப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.
குறித்த படகில் உள்ளவர்கள் நேற்று வெள்ளிக்கிழமையே தமக்கு ஆபத்து என உதவி கோரியதாகவும் அதன்படி அவர்களை பாதுகாக்கச் சென்ற அதிகாரிகள் இன்று காலையே அங்கு சென்றதாகவும் அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை, ஆப்கானிஸ்தான் மற்றும் ஈரான் ஆகிய நாட்டு புகலிடக் கோரிக்கையாளர்கள் குறித்த படகில் இருந்திருக்கலாம் என்று சந்தேகிக்கும் அமைச்சர், இந்த படகில் 97 பேர் பயணம் செய்திருக்கலாம் என்றும் காணாமல் போனவர்களை தேடும் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire