dimanche 14 juillet 2013

முஷரபுக்கு எதிராக மற்றொரு வழக்கு! இக்கட்டான கட்டத்தில் முஷரவ்

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷரபுக்கு எதிராக, இஸ்லாமாபாத் உயர்நீதிமன்றத்தில் ஹாரூன் ரசீத் என்பவர் ஒரு மனு தாக்கல் செய்துள்ளார். அதில், கடந்த 2007-ம் ஆண்டு ஜூலை 3-ந் திகதி முஷரப்பின் உத்தரவின் பேரில் லால் மஜீத்தில் இராணுவம் நடவடிக்கை எடுத்ததில் எனது தந்தை மற்றும் பாட்டி கொல்லப்பட்டனர் என தெரிவித்துள்ளார்.

ரசீதின் வாக்குமூலத்தை பதிவு செய்து கொண்ட நீதிபதி நூருல் ஹக் குரோஷி இது தொடர்பாக முஷரப் மீது வழக்கு பதிவு செய்யவும் என உத்தரவிட்டார். எனவே அடுத்தடுத்த வழக்குகளால் முஷரப்புக்கு கடும் நெருக்கடி உருவாகி வருகிறது.

பாகிஸ்தான் முன்னாள் ஜனாதிபதி பர்வேஸ் முஷரபுக்கு எதிராக, பெனாசிர் கொலை வழக்கு உள்பட பல்வேறு வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில், குறித்த வழக்கில் கைதுசெய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப்பட்டு இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

Aucun commentaire:

Enregistrer un commentaire