mercredi 3 juillet 2013

13 ஆவது திருத்தத்தை பாதுகாப்பதற்கு அழுத்தம் கொடுப்போம்;ரணில் விக்ரமசிங்க

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தத்தை பாதுகாக்க ஒன்றிணைவோம் என்று பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக்கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

13 ஆவது திருத்தத்தை பாதுகாப்பதற்கு அழுத்தம் கொடுப்போம், அதிகாரத்தை பகிர்வதற்காக கைகோர்ப்போம் என்ற தொனிப்பொருளில் கீழ் எதிர்க்ட்சிகளின் எதிர்ப்பினால் ஏற்பாடுசெய்யப்பட்ட மகஜரில் கையொப்பமிடும் போராட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இந்த போராட்டம் கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்றுமாலை நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் தலைவர்கள் கையொப்பமிட்டனர்.

Aucun commentaire:

Enregistrer un commentaire