jeudi 18 juillet 2013

நெருங்கி வந்துவிட்டது ராஜபக்ஷ ரெஜிமென்டை வீட்டுக்கு அனுப்பும் காலம்: சிறிதுங்க ஜயசூரிய!

நாட்டில் இடம்பெறும் கடும்போக்கு ஆட்சியை கலைத்து ராஜபக்ஷ ரெஜிமென்டை வீட்டுக்கு அனுப்பும் காலம் நெருங்கி வந்துவிட்டதென சோஷலிசக் கட்சியின் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய தெரிவித்தார்.கொழும்பில் இன்று புதன்கிழமை இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,நாட்டு மக்கள் பட்டினியில் வாடுகின்ற நிலையில் அரசாங்கம் நாடு முழுவதும் தேவையில்லாத அபிவிருத்திகளைமேற்கொண்டு நாட்டின் அபிவிருத்திகளை சீரழிக்கின்றது.
பொதுநலவாய மாநாடு எதிர்வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள நிலையிலேயே அபிவிருத்தி என்றபெயரில் நாடகமாடுகின்றது.உள்நாட்டு வருமானம் என்றுமில்லாத அளவிற்கு வீழ்ச்சியடைந்துள்ளது.பங்குப் பரிவர்த்தனை ஆணைக்குழுவின் அனைத்துவித நடவடிக்கைகளும் செயலிழந்துள்ளன.
தென்பகுதி சிங்கள பௌத்த மக்களை முட்டாள்களாக்கி தேர்தலில் வெற்றிபெற்ற அரசாங்கம் மாகாண சபை முறைமையையும் இல்லாதொழிக்க திட்டம் தீட்டியது.
இந்நிலையில் கடும்போக்கு ஆட்சிபுரியும் ராஜபக்ஷ ரெஜிமென்டை வீட்டுக்கு அனுப்பும் காலம் நெருங்கி வந்துவிட்டது என அவர் மேலும் தெரிவித்தார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire