mardi 9 juillet 2013

இன்று காலை முக்கிய சந்திப்பு ;மஹிந்த - மேனன்

news
இரண்டு நாள் பயணமாக சிறிலங்கா வந்துள்ள இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவ்சங்கர் மேனன், இன்று காலை சிறிலங்கா ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவைச் சந்தித்து முக்கிய பேச்சுக்களை நடத்தவுள்ளார். 
அலரி மாளிகையில் காலையுணவு விருந்துபசாரத்துடன் நடைபெறவுள்ள இந்தச் சந்திப்பின் போது, 13வது திருத்தச்சட்டம் தொடர்பாக இருதரப்பும் தமது இறுதி நிலைப்பாட்டை வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
13வது திருத்தத்தைப் பலவீனப்படுத்துவதில் சிறிலங்கா அரசு உறுதியாக உள்ளது. 
அதேவேளை, 13வது திருத்தத்தை பலவீனப்படுத்துவதற்கு சிறிலங்கா அரசு எந்த நடவடிக்கையிலும் இறங்கக் கூடாது என்று இந்தியா வலியுறுத்தி வருகிறது. 
இந்தநிலையிலேயே, 13வது திருத்தம் தொடர்பான இருதரப்பினதும் இறுதி நிலைப்பாடு என்ன என்பது குறித்து இன்றைய சந்திப்பில் ஆராயப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

Aucun commentaire:

Enregistrer un commentaire