mardi 2 juillet 2013

தமிழ் கட்சிகள் எடுக்காத பகிர‌ங்க முடிவுகள் 13 ஆவது திருத்தச் சட்டம் நீக்கினால் நான் உடடியாக அரசாங்கத்திலிருந்து விலகுவேன்; வாசுதேவ நாணயக்கார

அரசியலமைப்பின் 13 ஆவது திருத்தச் சட்டத்திற்கு எதிராக செயற்பட்டு அதை அரசாங்கம் நீக்கினால் நான் உடடியாக அரசாங்கத்திலிருந்து விலகுவேன் என மொழி மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

மாகாணசபை முறைமையை ஒழிப்பது என்பது தவறான விடயம். இதற்கு நான் எப்போது எதிர்ப்பாகவே இருப்பேன். இதேவேளை ஏகாதிபத்தியத்துக்கு நாம் வழிவகுக்கமாட்டோம். எனவே மாகாணங்களுக்குள்ள அதிகாரங்களில் அரசாங்கம் தலையிட முடியாது என்றார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire