mardi 2 juillet 2013

கூட்டமைப்பின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் மு.றெமீடியஸ் சுதந்திரக் கட்சியுடன் இணைந்தார்

தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் யாழ்.மாநகரசபை உறுப்பினர் மு.றெமீடியஸ் மாநகரசபை உறுப்பினர் பதவியை இராஜினாமாச் செய்து, அரசாங்கத்தின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொண்டுள்ளதாக செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த 2009ம் ஆண்டு நடைபெற்ற யாழ்.மாநகர சபைத் தேர்தலில் போட்டியிட்டு நகரசபை எல்லைக்குள் அதிகபடியான வாக்குகள் பெற்று தெரிவு செய்யப்பட்ட றெமீடியஸ், பின்னர் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் முரண்பாடுகளை எற்படுத்திக் கொண்டு கட்சியுடன் தொடர் முரண்பாட்டு நிலையிலிருந்தார்.
இந்நிலையில் தனது உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த றெமீடியஸ், தமிழ்த் தேசிய கூட்டமைப்பிலிருந்து விலகி சுதந்திரக் கட்சியுடன் இணைந்து கொள்ளவுள்ளதாகவும் பகிரங்கமான அறிவித்தலையும் விடுத்திருக்கின்றார்.
மேலும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பு இதுவரை தமிழர்களுக்கு எதுவித நன்மையும் செய்யாத நியைலில் அரசுடன் இணைந்து புனர்வாழ்வு, அபிவிருத்தி போன்ற இலக்குகளை அடைய தொடர்ந்தும் உழைப்பேன் எனவும் சத்தமிட்டுள்ளார்.

Aucun commentaire:

Enregistrer un commentaire