dimanche 14 juillet 2013

ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் இலங்கையைச் இராணுவத்தைச் சேர்ந்த பெண்கள்

ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் இலங்கையைச் இராணுவத்தைச் சேர்ந்த பெண்கள் இணைக்கப்பட்டுள்ளதாக இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் ருவான் வணிகசூரிய தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் அமைதிப் படையில் இணைந்து கொள்வதற்காகப் பயிற்சிகளை நிறைவுசெய்த இலங்கையைச் சேர்ந்த 100 பெண் படையினர் இவ்வாறு இணைக்கப்பட்டுள்ளனர். அமைதி காக்கும் படையில் பெண் படையினரை இணைத்துக் கொள்ளும் இந்த நடவடிக்கை 2010 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்மை குறிப்பிடத்தக்கது .
ஏற்கனவே இலங்கை இராணுவ வீரர்கள் ஐக்கிய நாடுகள் அமைதிப்படையில் இணைந்துள்ளனர். இவர்கள் லெபனான், ஹெய்டி போன்ற நாடுகளில் பணியாற்றி வருவதாகவும் இராணுவப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்

Aucun commentaire:

Enregistrer un commentaire